Friday, August 1, 2014

பாட்டு பாடவா‏

கேபிள் டிவியில் channel லுக்கு ஒன்றாய் சினிமா பாட்டுப் போட்டிகள்.தமிழ் சேனல்கள்தான் என்றாலும், பாடுவது தமிழ் பாடல்கள்தான் என்றாலும் நிகழ்ச்சியின் பெயர் என்னவோ ஆங்கிலத்தில்தான்-சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சன் சிங்கர், ஐடல் இத்யாதி..சினிமாவில் பாட சான்ஸ் கிடைத்ததோ இல்லையோ, ஜட்ஜ் சீட்டில் அமர சில பேருக்கு சான்ஸ் இருக்கத்தான் செய்கிறது.
மலையாளமும், தெலுங்கும் தாய் மொழியாக இருந்தாலும்,அக்ஷர சுத்தமாகப் பாடும் போட்டியாளர்கள். படித்தவனோ பாமரனோ,அனுபவித்து பாடும் போட்டியாளர்கள்.Amazing array of talent on display .

Fy ,fy ,fy ,கலக்கி fy ,சொதப்பி fy /daddy mummy வீட்டில் இல்ல/அட்றாரா நாக்க முக்க -போன்ற கருத்துச் செறிவு நிறைந்த தேனொழுகும் பாடல்களுக்கு நடுவே  danger zone ல்   hit  or  miss situation ல் , ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அறை  கூவல் விடுத்த கதையாய் , 'மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்று ஹிந்தோளத்தையும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' என்று ஆஹிர் பைரவியையும் துணைக்கு அழைக்கும் பொழுது போன தெம்பு திரும்பி வரத்தான் செய்கிறது- ரசனை இன்னும் அதள பாதாளத்திற்கு போகவில்லை, still there is redemption என்று.

P S: Jay corrects me and I stand corrected- It's raag Chandrakauns and not Hindolam.

No comments:

Post a Comment